முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Manathakkali keerai : வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை

 Manathakkali keerai வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை      காலை உணவை தவிர்ப்பதாலும் , நேரம் கடந்து சாப்பிடுவதாலும், அதிக கார உணவுகளை உண்பதாலும் வயிற்றிலும், குடல் பகுதியிலும், வாயிலும் புண்கள் ஏற்படுகிறது.     Duodenal ulcer அதாவது முன்கடலில் ஏற்படும் புண் காரணமாக வெறும் வயிற்றில் எரிச்சல், அதிக பசி, சாப்பிட்டவுடன் வலி நின்று விடுதல், காரம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டவுடன் எரிச்சல் ஆகியவை முன் குடல் புண்ணின் முக்கிய அறிகுறிகள்.     Gastric ulcer அதாவது இரை பையில் புண் இருந்தால் பசி குறைவாக இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு வயிற்று வலி ஏற்படுதல் மற்றும் நெஞ்செரிச்சல் இதன் அறிகுறிகள் ஆகும்.     வயிற்றுப் புண்களை கட்டுப்படுத்த வல்லது மணத்தக்காளி. இதில் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. மேலும் புரோட்டின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன. எனவே மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள், இளம் பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற ஓர் உணவாக உள்ள...
சமீபத்திய இடுகைகள்

Amman Bacharisi : நலம் நல்கும் அம்மான் பச்சரிசி

நலம் நல்கும் அம்மான் பச்சரிசி தாவரவியல் பெயர்:  Euphorbia hirta குடும்பம்: Euphorbiaceae     இதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள்: பெடூலின், ஆல்ஃபா அமைரின்(Alpha-amyrin), கேம்பால்(camphol), குவர்சிடின்(Quercitin), யூபோர்பின்(Euphorbin)     நம்முடைய முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய மூலிகை செடிகளில் ஒன்று தான் அம்மான் பச்சரிசி. இவை பார்ப்பதற்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.  வேறு பெயர்கள்:     சித்திர வல்லாதி, சித்திர பாலாவி, சித்திர பாலாடை  பெயர் காரணம்:     தோற்றத்திலும் சுவையிலும் சிறு சிறு அரிசி குருணைகள் போல காணப்படுவதால்'பச்சரிசி'என்றும் தாய்ப்பால் சுரப்பு உணவு என்பதால்'அம்மான்'என்ற அடைமொழியும் சேர்த்து அம்மான் பச்சரிசி என்று பெயர் பெற்றது. இதன் இலைகள் கூர்மையாக இருக்கும் . இதன் மெல்லிய தண்டை உடைத்தால் பால் வடியும்.  மலச்சிக்கல் நீங்க:     அம்மான் பச்சரிசி இலைகளோடு, பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். அத்தோடு உடல் சூட்டையும் தணிக்கும்.  மரு:   ...

Cancer :புற்றுநோய்

Cancer : புற்றுநோய்      உடலானது பல கோடி செல்களினால் உருவாக்கப்பட்டது. சாதாரணமாக செல்கள் இரண்டாக பிளவு படும். அவை மடியும் போது புதிய செல்கள் உருவாகி அவற்றை ஈடு செய்யும்.      செல்கள் கட்டுப்பாடற்று பிரிந்து பெருகுவதால் வரும் நோய் தான் புற்றுநோய்.      புற்றுநோய் என்பது உடல் செல்களின் அசாதாரண பெருக்கம் என வரையறுக்கப்படுகிறது. ரத்தப் புற்று நோய் (leukaemia) போன்ற குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளுடன், பெரும்பாலான புற்றுநோய் செல்கள் கட்டிகளின் வடிவத்தில் காணப்படுகின்றன.      ரத்த புற்று நோய், ரத்த உற்பத்திக்கு காரணமான எலும்பு மஜ்ஜையின் திசுக்களை பாதிக்கிறது. இந்த வகை புற்றுநோய் அபாயகரமானது. புற்றுநோயின் வகைகள்:- 1. பரவா புற்றுநோய் (benign) இது உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுவது இல்லை. மெதுவாக வளரும். ஆனாலும் மருத்துவரின் ஆலோசனை தேவை. 2. பரவும் புற்றுநோய் (malignant)      புற்றுநோய் உறவாகும் போது செல்கள் அசாதாரணமாக பிரிந்து, கட்டிகள் எனப்படும் வளர்ச்சியை உருவாக்குகின்றன. முதிர்ச்சி அடைந்த நிலையில் குருதி வழியாகவோ , நிணநீர்...

World cancer day : உலக புற்றுநோய் தினம்

  உலக புற்றுநோய் தினம் (World cancer day) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. புற்று நோயால் பாதிக்கப்படுவதை தடுக்க சர்வதேச அளவில் பெரிய சமூகத்தை அணி திரட்டுவதற்கான ஒரு நாளாக பார்க்கப்படுகிறது. இந்த உலகளாவிய முயற்சியின் பயனாக பல உயிர்கள் மரணத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றது      1993ல் நிறுவப்பட்ட சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) கடந்த 2000 ஆம் ஆண்டில் உலக புற்றுநோய் தினத்தை உருவாக்கியது.      பாரிசில் நடைபெற்ற புற்று நோய்க்கு எதிரான முதல் உலக உச்சி மாநாட்டில் தான் பிப்ரவரி நான்காம் நாளை உலகப் புற்றுநோய் தினமாக கடைப்பிடிக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், உலகெங்கிலும் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் புற்றுநோய் அமைப்புகளின் தலைவர்கள் புற்று நோய்க்கு எதிரான பாரிஸ் சாசனத்தில் கையெழுத்திட்டனர்.      புற்றுநோயை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உலகெங்கிலும் உள்ள பல புற்றுநோய் மற்றும் சுகாதார நிறுவனங்களின் இலக்காக புற்றுநோய் தினம் வந்துள்ளது. புற்று நோயின் தீவிர அபாயத்தை பற்றி மக்களுக்கு ...

Hibiscus natural medicine : செம்பருத்தி : சீன ரோஜா

  நலம் நல்கும் -செம்பருத்தி நம்முடைய வீடுகளில் செம்பருத்தி இருப்பது  வீட்டில் மருத்துவர் இருப்பதற்கு சமம். சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றனர். எனவே செம்பருத்தி தங்க புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது. செம்பருத்திக்கு சீன ரோஜா என்ற வேறு பெயரும் உண்டு. மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்தி.                  செம்பருத்தி யின் அறிவியல் பெயர் hibiscus Rosa sinensis. பொதுவாக செம்பருத்தி குளிர்ச்சி மிகுந்தது. எனவே உடல் சூட்டை நீக்கி குளிர்ச்சியை தருகிறது. ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.                நமது ஊர்களில் அதிகமாக வளரும் செடி செம்பருத்தி. சிவப்பு நிறம் தான் இதனுடைய இயல்பான நிறம். ஆனால் கலப்பின முறையில் பல நிறங்களிலும் பல அடுக்கு வகைகளிலும் காணப்படுகிறது.               உடலின் வெப்பநிலையை சீர் செய்து உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நினைவாற்றலை கூட்டும். கோபத்தை கட்டுப்படுத்தும். மனதிற்கு அம...

Republic day : குடியரசு தினம்

  ஜனவரி 26 குடியரசு தினம்                             குடியரசு என்றால் மக்களாட்சி என்று பொருள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சி செய்யும் முறையே  குடியரசு ஆட்சி முறையாகும்.           இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இந்திய மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு நாடாக அமைந்ததைக் கொண்டாடும்   நாள் தான் குடியரசு தினம்.            1950 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ராஜகோபாலச்சாரி ஜனவரி 26 ஆம் தேதி காலை 10:18 மணிக்கு இந்தியாவை இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசாக அறிவித்தார்.           பின்னர் இந்திய குடியரசின் முதல் குடியரசு தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார்.           அப்போதைய அரசு மாளிகை மற்றும் இன்றைய ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் அரங்கில் அவர் பதவியேற்ற பிறகு 10:30 மணிக்கு துப்பாக்கி தோட்டாக்கள் முழங்க டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவ...

jallikattu : ஜல்லிக்கட்டு : தமிழர்களின் வீர விளையாட்டு

  ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுகளில் விளையாட்டுகளில் ஒன்று தான் ஜல்லிக்கட்டு   ஏறு என்பது காளை மாட்டை குறிக்கும் மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பை பிடித்து வீழ்த்துவதுதான் ஜல்லிக்கட்டு   தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று தான் ஜல்லிக்கட்டு நூற்றாண்டுகளைக் கடந்து தமிழினத்தின் தனித்துவமாக திகழ்கிறது ஜல்லிக்கட்டு 50 ஆண்டுகளுக்கு முன்னர் சல்லி காசு என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டி விடும் வழக்கம் இருந்தது. இதுதான் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்று மாறியது பின்னர் அதுவே பேச்சு வழக்கில் திரிந்து ஜல்லிக்கட்டில் என்று அழைக்கப்பட்டது மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பணம் முடிப்பு பரிசளிக்கப்படும் தைப்பொங்கல் திருநாளில் மறுநாளான மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது சிந்துவெளி நாகரிகத்தில் ஏறுதழுவுதல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன கொல்லக்கூடிய காளையை தழுவி போரிட்டு அடக்குவதால் குளிர ...