முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Hibiscus natural medicine : செம்பருத்தி : சீன ரோஜா

 நலம் நல்கும் -செம்பருத்தி

நம்முடைய வீடுகளில் செம்பருத்தி இருப்பது 

வீட்டில் மருத்துவர் இருப்பதற்கு சமம்.

சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றனர்.

எனவே செம்பருத்தி தங்க புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது.

செம்பருத்திக்கு சீன ரோஜா என்ற வேறு பெயரும் உண்டு.

மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்தி.

                 செம்பருத்தி யின் அறிவியல் பெயர் hibiscus Rosa sinensis. பொதுவாக செம்பருத்தி குளிர்ச்சி மிகுந்தது. எனவே உடல் சூட்டை நீக்கி குளிர்ச்சியை தருகிறது. ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.

               நமது ஊர்களில் அதிகமாக வளரும் செடி செம்பருத்தி. சிவப்பு நிறம் தான் இதனுடைய இயல்பான நிறம். ஆனால் கலப்பின முறையில் பல நிறங்களிலும் பல அடுக்கு வகைகளிலும் காணப்படுகிறது.

              உடலின் வெப்பநிலையை சீர் செய்து உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நினைவாற்றலை கூட்டும். கோபத்தை கட்டுப்படுத்தும். மனதிற்கு அமைதியைத் தரும்.

              செம்பருத்தி யில் ரிபோபிளேவின், கரோட்டின், அமிலங்கள், குளுக்கோசைடுகள், விட்டமின் சி என எண்ணற்ற வேதிப்பொருட்களை உள்ளடக்கிய தாவரம் தான் செம்பருத்தி.

             செம்பருத்தியின் வேர் , இலை, பூ என எல்லாமே மருத்துவ குணம் நிறைந்தது. இலைகள் தசை வலியை குறைப்பதோடு தசையை மிருதுவாக்கும்.

வயிற்றுப்புண்:

         காலையில் எழுந்து ஐந்து பூக்களின் இதழ்களை மென்று சாப்பிட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் பருக வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் ஆறும்.

இதயம் வலுப்பெற:

         செம்பருத்தியில் உள்ள கார்டியாக் கிளைக்கோசைட் என்னும் வேதிப்பொருள் இதயத்தை பலப்படுத்துவதோடு ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை உடையது. ஐந்து செம்பருத்திப் பூவின் இதழ்களை கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து பருகிவர இதயம் வலுப்பெறுவதோடு இரத்த ஓட்டம் சீராகும். ரத்த அழுத்தத்தை சீர் செய்ய இலைகளை கொதிக்க வைத்து வடிகட்டி பருகும் போது ரத்தத்தில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுவதோடு உயிர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள்:

        பருவமடைய வேண்டிய வயது வந்தும் பருவமடையாத பெண்களுக்கு ஐந்து செம்பருத்திப் பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும். மாதவிடாய் பிரச்சனைகளை சீர் செய்யும். கர்ப்பப்பை குறைபாடுகளை சீர் செய்யும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலியை போக்கும்.

சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மாற பத்து செம்பருத்தி பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

செம்பருத்தி இலை சாறு தலை வழுக்கை மற்றும் முடியை கருமையாக்க உதவுகிறது. இலைகளை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கும் போது கூந்தல் பட்டுப்போன்று காணப்படும். நன்றி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Republic day : குடியரசு தினம்

  ஜனவரி 26 குடியரசு தினம்                             குடியரசு என்றால் மக்களாட்சி என்று பொருள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சி செய்யும் முறையே  குடியரசு ஆட்சி முறையாகும்.           இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இந்திய மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு நாடாக அமைந்ததைக் கொண்டாடும்   நாள் தான் குடியரசு தினம்.            1950 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ராஜகோபாலச்சாரி ஜனவரி 26 ஆம் தேதி காலை 10:18 மணிக்கு இந்தியாவை இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசாக அறிவித்தார்.           பின்னர் இந்திய குடியரசின் முதல் குடியரசு தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார்.           அப்போதைய அரசு மாளிகை மற்றும் இன்றைய ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் அரங்கில் அவர் பதவியேற்ற பிறகு 10:30 மணிக்கு துப்பாக்கி தோட்டாக்கள் முழங்க டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவ...

Amman Bacharisi : நலம் நல்கும் அம்மான் பச்சரிசி

நலம் நல்கும் அம்மான் பச்சரிசி தாவரவியல் பெயர்:  Euphorbia hirta குடும்பம்: Euphorbiaceae     இதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள்: பெடூலின், ஆல்ஃபா அமைரின்(Alpha-amyrin), கேம்பால்(camphol), குவர்சிடின்(Quercitin), யூபோர்பின்(Euphorbin)     நம்முடைய முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய மூலிகை செடிகளில் ஒன்று தான் அம்மான் பச்சரிசி. இவை பார்ப்பதற்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.  வேறு பெயர்கள்:     சித்திர வல்லாதி, சித்திர பாலாவி, சித்திர பாலாடை  பெயர் காரணம்:     தோற்றத்திலும் சுவையிலும் சிறு சிறு அரிசி குருணைகள் போல காணப்படுவதால்'பச்சரிசி'என்றும் தாய்ப்பால் சுரப்பு உணவு என்பதால்'அம்மான்'என்ற அடைமொழியும் சேர்த்து அம்மான் பச்சரிசி என்று பெயர் பெற்றது. இதன் இலைகள் கூர்மையாக இருக்கும் . இதன் மெல்லிய தண்டை உடைத்தால் பால் வடியும்.  மலச்சிக்கல் நீங்க:     அம்மான் பச்சரிசி இலைகளோடு, பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். அத்தோடு உடல் சூட்டையும் தணிக்கும்.  மரு:   ...

jallikattu : ஜல்லிக்கட்டு : தமிழர்களின் வீர விளையாட்டு

  ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுகளில் விளையாட்டுகளில் ஒன்று தான் ஜல்லிக்கட்டு   ஏறு என்பது காளை மாட்டை குறிக்கும் மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பை பிடித்து வீழ்த்துவதுதான் ஜல்லிக்கட்டு   தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று தான் ஜல்லிக்கட்டு நூற்றாண்டுகளைக் கடந்து தமிழினத்தின் தனித்துவமாக திகழ்கிறது ஜல்லிக்கட்டு 50 ஆண்டுகளுக்கு முன்னர் சல்லி காசு என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டி விடும் வழக்கம் இருந்தது. இதுதான் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்று மாறியது பின்னர் அதுவே பேச்சு வழக்கில் திரிந்து ஜல்லிக்கட்டில் என்று அழைக்கப்பட்டது மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பணம் முடிப்பு பரிசளிக்கப்படும் தைப்பொங்கல் திருநாளில் மறுநாளான மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது சிந்துவெளி நாகரிகத்தில் ஏறுதழுவுதல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன கொல்லக்கூடிய காளையை தழுவி போரிட்டு அடக்குவதால் குளிர ...