முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Hibiscus natural medicine : செம்பருத்தி : சீன ரோஜா

 நலம் நல்கும் -செம்பருத்தி

நம்முடைய வீடுகளில் செம்பருத்தி இருப்பது 

வீட்டில் மருத்துவர் இருப்பதற்கு சமம்.

சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றனர்.

எனவே செம்பருத்தி தங்க புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது.

செம்பருத்திக்கு சீன ரோஜா என்ற வேறு பெயரும் உண்டு.

மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்தி.

                 செம்பருத்தி யின் அறிவியல் பெயர் hibiscus Rosa sinensis. பொதுவாக செம்பருத்தி குளிர்ச்சி மிகுந்தது. எனவே உடல் சூட்டை நீக்கி குளிர்ச்சியை தருகிறது. ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.

               நமது ஊர்களில் அதிகமாக வளரும் செடி செம்பருத்தி. சிவப்பு நிறம் தான் இதனுடைய இயல்பான நிறம். ஆனால் கலப்பின முறையில் பல நிறங்களிலும் பல அடுக்கு வகைகளிலும் காணப்படுகிறது.

              உடலின் வெப்பநிலையை சீர் செய்து உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நினைவாற்றலை கூட்டும். கோபத்தை கட்டுப்படுத்தும். மனதிற்கு அமைதியைத் தரும்.

              செம்பருத்தி யில் ரிபோபிளேவின், கரோட்டின், அமிலங்கள், குளுக்கோசைடுகள், விட்டமின் சி என எண்ணற்ற வேதிப்பொருட்களை உள்ளடக்கிய தாவரம் தான் செம்பருத்தி.

             செம்பருத்தியின் வேர் , இலை, பூ என எல்லாமே மருத்துவ குணம் நிறைந்தது. இலைகள் தசை வலியை குறைப்பதோடு தசையை மிருதுவாக்கும்.

வயிற்றுப்புண்:

         காலையில் எழுந்து ஐந்து பூக்களின் இதழ்களை மென்று சாப்பிட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் பருக வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் ஆறும்.

இதயம் வலுப்பெற:

         செம்பருத்தியில் உள்ள கார்டியாக் கிளைக்கோசைட் என்னும் வேதிப்பொருள் இதயத்தை பலப்படுத்துவதோடு ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை உடையது. ஐந்து செம்பருத்திப் பூவின் இதழ்களை கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து பருகிவர இதயம் வலுப்பெறுவதோடு இரத்த ஓட்டம் சீராகும். ரத்த அழுத்தத்தை சீர் செய்ய இலைகளை கொதிக்க வைத்து வடிகட்டி பருகும் போது ரத்தத்தில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுவதோடு உயிர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள்:

        பருவமடைய வேண்டிய வயது வந்தும் பருவமடையாத பெண்களுக்கு ஐந்து செம்பருத்திப் பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும். மாதவிடாய் பிரச்சனைகளை சீர் செய்யும். கர்ப்பப்பை குறைபாடுகளை சீர் செய்யும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலியை போக்கும்.

சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மாற பத்து செம்பருத்தி பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

செம்பருத்தி இலை சாறு தலை வழுக்கை மற்றும் முடியை கருமையாக்க உதவுகிறது. இலைகளை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கும் போது கூந்தல் பட்டுப்போன்று காணப்படும். நன்றி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Manathakkali keerai : வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை

 Manathakkali keerai வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை      காலை உணவை தவிர்ப்பதாலும் , நேரம் கடந்து சாப்பிடுவதாலும், அதிக கார உணவுகளை உண்பதாலும் வயிற்றிலும், குடல் பகுதியிலும், வாயிலும் புண்கள் ஏற்படுகிறது.     Duodenal ulcer அதாவது முன்கடலில் ஏற்படும் புண் காரணமாக வெறும் வயிற்றில் எரிச்சல், அதிக பசி, சாப்பிட்டவுடன் வலி நின்று விடுதல், காரம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டவுடன் எரிச்சல் ஆகியவை முன் குடல் புண்ணின் முக்கிய அறிகுறிகள்.     Gastric ulcer அதாவது இரை பையில் புண் இருந்தால் பசி குறைவாக இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு வயிற்று வலி ஏற்படுதல் மற்றும் நெஞ்செரிச்சல் இதன் அறிகுறிகள் ஆகும்.     வயிற்றுப் புண்களை கட்டுப்படுத்த வல்லது மணத்தக்காளி. இதில் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. மேலும் புரோட்டின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன. எனவே மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள், இளம் பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற ஓர் உணவாக உள்ளது.     மலச்சிக்கலுக்கு சிறந்த மருத்துவ நிவாரணையா

Amman Bacharisi : நலம் நல்கும் அம்மான் பச்சரிசி

நலம் நல்கும் அம்மான் பச்சரிசி தாவரவியல் பெயர்:  Euphorbia hirta குடும்பம்: Euphorbiaceae     இதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள்: பெடூலின், ஆல்ஃபா அமைரின்(Alpha-amyrin), கேம்பால்(camphol), குவர்சிடின்(Quercitin), யூபோர்பின்(Euphorbin)     நம்முடைய முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய மூலிகை செடிகளில் ஒன்று தான் அம்மான் பச்சரிசி. இவை பார்ப்பதற்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.  வேறு பெயர்கள்:     சித்திர வல்லாதி, சித்திர பாலாவி, சித்திர பாலாடை  பெயர் காரணம்:     தோற்றத்திலும் சுவையிலும் சிறு சிறு அரிசி குருணைகள் போல காணப்படுவதால்'பச்சரிசி'என்றும் தாய்ப்பால் சுரப்பு உணவு என்பதால்'அம்மான்'என்ற அடைமொழியும் சேர்த்து அம்மான் பச்சரிசி என்று பெயர் பெற்றது. இதன் இலைகள் கூர்மையாக இருக்கும் . இதன் மெல்லிய தண்டை உடைத்தால் பால் வடியும்.  மலச்சிக்கல் நீங்க:     அம்மான் பச்சரிசி இலைகளோடு, பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். அத்தோடு உடல் சூட்டையும் தணிக்கும்.  மரு:     மருவின் மீது அம்மான் பச்சரிசி பாலை தடவி வந்தால் மரு உதிரும்.

mattu pongal : மாட்டுப் பொங்கல் :உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றி உணர்வோடு மதித்துப் போற்றிடும் திருநாள்

  மாட்டுப்பொங்கல் மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும். பெரும் பொங்கலுக்கு அடுத்த நாளன மாட்டுப்பொங்கல் உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றி உணர்வோடு மதித்துப் போற்றிடும் திருநாள் மாட்டுப் பொங்கல் பெரும் செல்வமாக கருதும் மாடுகளை உழவர்கள் குளிப்பாட்டி அழகுபடுத்தி, கழுத்தில் சலங்கை கட்டி, கொம்பில் வர்ணங்கள் பூசி, நெத்தியில் மஞ்சள் பூசி, குங்குமம் பொட்டு வைத்து பொங்கலிட்டு வணங்குவர்   மாட்டுப்பொங்கலை தொடர்ந்து எருது விடும் திருவிழா நடைபெறும் இவ்விழா மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, எருது கட்டு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது   தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் விழாவே மாட்டுப் பொங்கல் பண்டைய காலத்தில் ஏறு தழுவுதல் என பெயர் இவ்விளையாட்டு வீரத்திற்கு அடையாளமாக இருந்தாலும் எருதுகளை அன்போடு தழுவி அதன் உடம்பில் சிறு காயம் கூட ஏற்படா வண்ணம் நடைபெறுவதே இதன் சிறப்பு வெற்றி பெறும் ஆடவரை பெண்கள் விரும்பி   மனப்பர்