Manathakkali keerai
வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை
காலை உணவை தவிர்ப்பதாலும் , நேரம் கடந்து சாப்பிடுவதாலும், அதிக கார உணவுகளை உண்பதாலும் வயிற்றிலும், குடல் பகுதியிலும், வாயிலும் புண்கள் ஏற்படுகிறது.
Duodenal ulcer அதாவது முன்கடலில் ஏற்படும் புண் காரணமாக வெறும் வயிற்றில் எரிச்சல், அதிக பசி, சாப்பிட்டவுடன் வலி நின்று விடுதல், காரம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டவுடன் எரிச்சல் ஆகியவை முன் குடல் புண்ணின் முக்கிய அறிகுறிகள்.
Gastric ulcer அதாவது இரை பையில் புண் இருந்தால் பசி குறைவாக இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு வயிற்று வலி ஏற்படுதல் மற்றும் நெஞ்செரிச்சல் இதன் அறிகுறிகள் ஆகும்.
வயிற்றுப் புண்களை கட்டுப்படுத்த வல்லது மணத்தக்காளி. இதில் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. மேலும் புரோட்டின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன. எனவே மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள், இளம் பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற ஓர் உணவாக உள்ளது.
மலச்சிக்கலுக்கு சிறந்த மருத்துவ நிவாரணையாக மணத்தக்காளி உள்ளது அத்தோடு செரிமான கோளாறை சரி செய்யும்.
வயிற்றுப் புண்ணை குணமாக்குவதோடு வாய்ப்புண்ணையும் குணமாக்கும் தன்மை கொண்டது மணத்தக்காளி கீரை.
பச்சை இலைகளை எடுத்து நெய் சேர்த்து வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குறையும். பச்சை இலைகளை மென்று அதன் சாற்றை விழுங்கினால் வாய்ப்புண் விரைவில் குறையும்.
மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சூடு குறையும்.
வெயிலினால் ஏற்படும் கட்டிகள், தோல் அரிப்பு, தோல் அலர்ஜி போன்றவற்றின் மேல் மணத்தக்காளி கீரையின் சாற்றை தடவி வர விரைவில் குணமாகும். கண்பார்வை தெளிவு பெறும்.
மூட்டு பகுதியில் ஏற்படும் வீக்கம் குறைய, மணத்தக்காளி இலைகளை வதக்கி ஒத்தடம் கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.
மஞ்சள் காமாலையினால் கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகள் தீர மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேடைப் பேச்சாளர்கள், பாடகர்கள் போன்றவர்கள் தொண்டை வறண்டு போகும் அளவிற்கு பேசும் போதும் பாடும் போதும் தொண்டை கட்டிக் கொள்வதோடு வீக்கம் மற்றும் புண்கள் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய மணத்தக்காளி கீரையை உணவில் அடிக்கடி எடுத்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
குறைந்த அளவில் நீரை பருகுவதால் சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலை ஏற்படுகிறது. இதனை கரைக்கவும் நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றவும் மணத்தக்காளி கீரை பயன்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக