முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Cancer :புற்றுநோய்


Cancer : புற்றுநோய்

     உடலானது பல கோடி செல்களினால் உருவாக்கப்பட்டது. சாதாரணமாக செல்கள் இரண்டாக பிளவு படும். அவை மடியும் போது புதிய செல்கள் உருவாகி அவற்றை ஈடு செய்யும்.


     செல்கள் கட்டுப்பாடற்று பிரிந்து பெருகுவதால் வரும் நோய் தான் புற்றுநோய்.

     புற்றுநோய் என்பது உடல் செல்களின் அசாதாரண பெருக்கம் என வரையறுக்கப்படுகிறது. ரத்தப் புற்று நோய் (leukaemia) போன்ற குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளுடன், பெரும்பாலான புற்றுநோய் செல்கள் கட்டிகளின் வடிவத்தில் காணப்படுகின்றன.

     ரத்த புற்று நோய், ரத்த உற்பத்திக்கு காரணமான எலும்பு மஜ்ஜையின் திசுக்களை பாதிக்கிறது. இந்த வகை புற்றுநோய் அபாயகரமானது.

புற்றுநோயின் வகைகள்:-

1. பரவா புற்றுநோய் (benign)

இது உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுவது இல்லை. மெதுவாக வளரும். ஆனாலும் மருத்துவரின் ஆலோசனை தேவை.

2. பரவும் புற்றுநோய் (malignant)

     புற்றுநோய் உறவாகும் போது செல்கள் அசாதாரணமாக பிரிந்து, கட்டிகள் எனப்படும் வளர்ச்சியை உருவாக்குகின்றன. முதிர்ச்சி அடைந்த நிலையில் குருதி வழியாகவோ , நிணநீர் வழியாகவோ உடலில் மற்ற பாகங்களுக்கு பரவும்.

உலக சுகாதார நிறுவனம் ஐந்து முக்கிய காரணிகளை பட்டியல் இடுகிறது.

1. புகையிலை பொருட்களை உட்கொள்வது

2. மது அருந்துதல்

3. உடல் எடை அதிகமாக இருப்பது

4. உடல் உழைப்பு இல்லாமை

5. குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது

     இதில் அதிக நபர்களுக்கு புற்றுநோய் வர காரணமாக இருப்பது புகையிலை பழக்கம். உலக அளவில் 22 % மக்களின் புற்றுநோய் பாதிப்புக்கு காரணமாக இருப்பது புகையிலை. புகைப்பிடித்தல் மட்டுமல்ல, வேறு எந்த வகையில் புகையிலை பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்.

     புற்றுநோய் உடலில் எங்கு வேண்டுமானாலும் உருவாகலாம். ஆனால் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் வயிறு, நுரையீரல், கல்லீரல், பெருங்குடல் மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளில் ஆகும்.

புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதே நோய் தாக்கிய வரை மீட்பதன் முதல் படி.

நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்:-

     நாள்பட்ட இருமல், சளியில் ரத்தம், நாள்பட்ட மார்பு வலி, சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம், எடை இழப்பு, தலைவலியுடன் உடல் மற்றும் மூட்டு வலி, பேச்சில் மாற்றம் (கரகரப்பு) ஆகியவை.

வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகள்:-

பசி இல்லாமை, எடை இழப்பு, வயிற்று வலி, வீக்கம், நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, குமட்டல், ரத்தத்துடன் கூடிய அல்லது சாதாரண வாந்தி.

மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள்:-

     வீங்குதல், காம்பிலிருந்து இரத்தம் வடிதல், சிவந்து வீக்கம் அடைந்த மார்புக்காம்பு, பெரிதாகுதல், கல் போல் கடினம் ஆகுதல், எலும்பு வலி, முதுகு வலி, அக்குள் பகுதியில் வீக்கம் வலி, சிவந்திருத்தல், ஒரு பகுதி மற்ற பகுதியை விட வித்தியாசமாக உணரப்படுதல்.

தடுப்பு நடவடிக்கைகள்:-

*புகையிலை, மது போன்றவற்றை தவிர்ப்பது

*பான், பான் மசாலா போன்ற சுவைக்கும் வகை புகையிலை பொருட்களை தவிர்ப்பது

*சுகாதாரமற்ற சூழலை தவிர்ப்பது

*முறையற்ற உடலுறவை தவிர்ப்பது

*உள் உறுப்புகளை சுத்தமாக வைத்திருத்தல்

*உடல் எடையை சரியாக பராமரித்தல்

*மாதவிடாயை மாற்றக்கூடிய மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது

*பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது

*உடற்பயிற்சிகள் செய்தல்

     புற்றுநோய் பாதிப்பின் அளவு அதிகரித்து வரும் சூழலில், சரியான விழிப்புணர்வும், சீரான பழக்க வழக்கமும், நோயின் அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல், மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது மிகவும் அவசியம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Manathakkali keerai : வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை

 Manathakkali keerai வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை      காலை உணவை தவிர்ப்பதாலும் , நேரம் கடந்து சாப்பிடுவதாலும், அதிக கார உணவுகளை உண்பதாலும் வயிற்றிலும், குடல் பகுதியிலும், வாயிலும் புண்கள் ஏற்படுகிறது.     Duodenal ulcer அதாவது முன்கடலில் ஏற்படும் புண் காரணமாக வெறும் வயிற்றில் எரிச்சல், அதிக பசி, சாப்பிட்டவுடன் வலி நின்று விடுதல், காரம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டவுடன் எரிச்சல் ஆகியவை முன் குடல் புண்ணின் முக்கிய அறிகுறிகள்.     Gastric ulcer அதாவது இரை பையில் புண் இருந்தால் பசி குறைவாக இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு வயிற்று வலி ஏற்படுதல் மற்றும் நெஞ்செரிச்சல் இதன் அறிகுறிகள் ஆகும்.     வயிற்றுப் புண்களை கட்டுப்படுத்த வல்லது மணத்தக்காளி. இதில் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. மேலும் புரோட்டின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன. எனவே மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள், இளம் பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற ஓர் உணவாக உள்ளது.     மலச்சிக்கலுக்கு சிறந்த மருத்துவ நிவாரணையா

Amman Bacharisi : நலம் நல்கும் அம்மான் பச்சரிசி

நலம் நல்கும் அம்மான் பச்சரிசி தாவரவியல் பெயர்:  Euphorbia hirta குடும்பம்: Euphorbiaceae     இதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள்: பெடூலின், ஆல்ஃபா அமைரின்(Alpha-amyrin), கேம்பால்(camphol), குவர்சிடின்(Quercitin), யூபோர்பின்(Euphorbin)     நம்முடைய முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய மூலிகை செடிகளில் ஒன்று தான் அம்மான் பச்சரிசி. இவை பார்ப்பதற்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.  வேறு பெயர்கள்:     சித்திர வல்லாதி, சித்திர பாலாவி, சித்திர பாலாடை  பெயர் காரணம்:     தோற்றத்திலும் சுவையிலும் சிறு சிறு அரிசி குருணைகள் போல காணப்படுவதால்'பச்சரிசி'என்றும் தாய்ப்பால் சுரப்பு உணவு என்பதால்'அம்மான்'என்ற அடைமொழியும் சேர்த்து அம்மான் பச்சரிசி என்று பெயர் பெற்றது. இதன் இலைகள் கூர்மையாக இருக்கும் . இதன் மெல்லிய தண்டை உடைத்தால் பால் வடியும்.  மலச்சிக்கல் நீங்க:     அம்மான் பச்சரிசி இலைகளோடு, பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். அத்தோடு உடல் சூட்டையும் தணிக்கும்.  மரு:     மருவின் மீது அம்மான் பச்சரிசி பாலை தடவி வந்தால் மரு உதிரும்.

mattu pongal : மாட்டுப் பொங்கல் :உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றி உணர்வோடு மதித்துப் போற்றிடும் திருநாள்

  மாட்டுப்பொங்கல் மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும். பெரும் பொங்கலுக்கு அடுத்த நாளன மாட்டுப்பொங்கல் உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றி உணர்வோடு மதித்துப் போற்றிடும் திருநாள் மாட்டுப் பொங்கல் பெரும் செல்வமாக கருதும் மாடுகளை உழவர்கள் குளிப்பாட்டி அழகுபடுத்தி, கழுத்தில் சலங்கை கட்டி, கொம்பில் வர்ணங்கள் பூசி, நெத்தியில் மஞ்சள் பூசி, குங்குமம் பொட்டு வைத்து பொங்கலிட்டு வணங்குவர்   மாட்டுப்பொங்கலை தொடர்ந்து எருது விடும் திருவிழா நடைபெறும் இவ்விழா மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, எருது கட்டு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது   தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் விழாவே மாட்டுப் பொங்கல் பண்டைய காலத்தில் ஏறு தழுவுதல் என பெயர் இவ்விளையாட்டு வீரத்திற்கு அடையாளமாக இருந்தாலும் எருதுகளை அன்போடு தழுவி அதன் உடம்பில் சிறு காயம் கூட ஏற்படா வண்ணம் நடைபெறுவதே இதன் சிறப்பு வெற்றி பெறும் ஆடவரை பெண்கள் விரும்பி   மனப்பர்