முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

World cancer day : உலக புற்றுநோய் தினம்

 உலக புற்றுநோய் தினம்

(World cancer day) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

புற்று நோயால் பாதிக்கப்படுவதை தடுக்க சர்வதேச அளவில் பெரிய சமூகத்தை அணி திரட்டுவதற்கான ஒரு நாளாக பார்க்கப்படுகிறது. இந்த உலகளாவிய முயற்சியின் பயனாக பல உயிர்கள் மரணத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றது


     1993ல் நிறுவப்பட்ட சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) கடந்த 2000 ஆம் ஆண்டில் உலக புற்றுநோய் தினத்தை உருவாக்கியது.

     பாரிசில் நடைபெற்ற புற்று நோய்க்கு எதிரான முதல் உலக உச்சி மாநாட்டில் தான் பிப்ரவரி நான்காம் நாளை உலகப் புற்றுநோய் தினமாக கடைப்பிடிக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், உலகெங்கிலும் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் புற்றுநோய் அமைப்புகளின் தலைவர்கள் புற்று நோய்க்கு எதிரான பாரிஸ் சாசனத்தில் கையெழுத்திட்டனர்.

     புற்றுநோயை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உலகெங்கிலும் உள்ள பல புற்றுநோய் மற்றும் சுகாதார நிறுவனங்களின் இலக்காக புற்றுநோய் தினம் வந்துள்ளது. புற்று நோயின் தீவிர அபாயத்தை பற்றி மக்களுக்கு அறிவுறுத்துகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி மக்கள் மத்தியில் மரணத்தை ஏற்படுத்தும் இரண்டாவது கொடிய நோயாக புற்றுநோய் உள்ளது.

     உடலானது பல கோடி செல்களினால் உருவாக்கப்பட்டது. சாதாரண செல்கள் வளரும். அதன்பின் பிரியும் (இரண்டாக பிளவு படும்). அவை இறக்கும் போது, புதிய செல்கள் உருவாகி அவற்றை ஈடு செய்யும். புற்றுநோய் என்பது உடல் செல்களில் அசாதாரண மாற்றங்களினால் விளையும் நோயாகும். அதனால் அவை தன்னிச்சையாக கட்டுப்பாடு இன்றி பிரிந்து ஒரு கட்டியாக வளர ஆரம்பிக்கும். அதுதான் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.

     புற்றுநோய் கட்டிகள் புற்றுசாராமலோ (கடுமை இல்லாதது) அல்லது புற்று சார்ந்தோ (வீரியமிக்கது) இருக்கலாம்.

     புற்றுசாரா கட்டிகள் உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுவது இல்லை. ஆயினும் மருத்துவரின் ஆலோசனை நிச்சயமாக தேவை. புற்றுசார் கட்டிகள் எங்கு தொடங்கியதோ அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு பரவக் கூடும். அது கட்டிகளுக்கு அருகில் இருக்கும் திசுக்களுக்கு பரவி அதன் பின் இரத்தம் அல்லது நிணநீர் வழியாக உடலின் மற்ற பாகங்களுக்கு பரவும். உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயாக பார்க்கப்படும் புற்றுநோய் பாதிப்பின் அளவு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

     சரியான விழிப்புணர்வும் , சீரான பழக்கவழக்கமும் இருந்தால் புற்றுநோயை கண்டு பயப்படத் தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதனை முற்றிலுமாக குணப்படுத்தலாம்.

     உடலில் தோன்றுகின்ற நோயின் அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல், உடனே மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.

     சரியான விழிப்புணர்வும் , முறையான மருத்துவ ஆலோசனையும் இருந்தால் புற்று நோயை வெல்லலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Manathakkali keerai : வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை

 Manathakkali keerai வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை      காலை உணவை தவிர்ப்பதாலும் , நேரம் கடந்து சாப்பிடுவதாலும், அதிக கார உணவுகளை உண்பதாலும் வயிற்றிலும், குடல் பகுதியிலும், வாயிலும் புண்கள் ஏற்படுகிறது.     Duodenal ulcer அதாவது முன்கடலில் ஏற்படும் புண் காரணமாக வெறும் வயிற்றில் எரிச்சல், அதிக பசி, சாப்பிட்டவுடன் வலி நின்று விடுதல், காரம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டவுடன் எரிச்சல் ஆகியவை முன் குடல் புண்ணின் முக்கிய அறிகுறிகள்.     Gastric ulcer அதாவது இரை பையில் புண் இருந்தால் பசி குறைவாக இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு வயிற்று வலி ஏற்படுதல் மற்றும் நெஞ்செரிச்சல் இதன் அறிகுறிகள் ஆகும்.     வயிற்றுப் புண்களை கட்டுப்படுத்த வல்லது மணத்தக்காளி. இதில் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. மேலும் புரோட்டின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன. எனவே மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள், இளம் பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற ஓர் உணவாக உள்ளது.     மலச்சிக்கலுக்கு சிறந்த மருத்துவ நிவாரணையா

Amman Bacharisi : நலம் நல்கும் அம்மான் பச்சரிசி

நலம் நல்கும் அம்மான் பச்சரிசி தாவரவியல் பெயர்:  Euphorbia hirta குடும்பம்: Euphorbiaceae     இதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள்: பெடூலின், ஆல்ஃபா அமைரின்(Alpha-amyrin), கேம்பால்(camphol), குவர்சிடின்(Quercitin), யூபோர்பின்(Euphorbin)     நம்முடைய முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய மூலிகை செடிகளில் ஒன்று தான் அம்மான் பச்சரிசி. இவை பார்ப்பதற்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.  வேறு பெயர்கள்:     சித்திர வல்லாதி, சித்திர பாலாவி, சித்திர பாலாடை  பெயர் காரணம்:     தோற்றத்திலும் சுவையிலும் சிறு சிறு அரிசி குருணைகள் போல காணப்படுவதால்'பச்சரிசி'என்றும் தாய்ப்பால் சுரப்பு உணவு என்பதால்'அம்மான்'என்ற அடைமொழியும் சேர்த்து அம்மான் பச்சரிசி என்று பெயர் பெற்றது. இதன் இலைகள் கூர்மையாக இருக்கும் . இதன் மெல்லிய தண்டை உடைத்தால் பால் வடியும்.  மலச்சிக்கல் நீங்க:     அம்மான் பச்சரிசி இலைகளோடு, பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். அத்தோடு உடல் சூட்டையும் தணிக்கும்.  மரு:     மருவின் மீது அம்மான் பச்சரிசி பாலை தடவி வந்தால் மரு உதிரும்.

mattu pongal : மாட்டுப் பொங்கல் :உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றி உணர்வோடு மதித்துப் போற்றிடும் திருநாள்

  மாட்டுப்பொங்கல் மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும். பெரும் பொங்கலுக்கு அடுத்த நாளன மாட்டுப்பொங்கல் உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றி உணர்வோடு மதித்துப் போற்றிடும் திருநாள் மாட்டுப் பொங்கல் பெரும் செல்வமாக கருதும் மாடுகளை உழவர்கள் குளிப்பாட்டி அழகுபடுத்தி, கழுத்தில் சலங்கை கட்டி, கொம்பில் வர்ணங்கள் பூசி, நெத்தியில் மஞ்சள் பூசி, குங்குமம் பொட்டு வைத்து பொங்கலிட்டு வணங்குவர்   மாட்டுப்பொங்கலை தொடர்ந்து எருது விடும் திருவிழா நடைபெறும் இவ்விழா மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, எருது கட்டு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது   தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் விழாவே மாட்டுப் பொங்கல் பண்டைய காலத்தில் ஏறு தழுவுதல் என பெயர் இவ்விளையாட்டு வீரத்திற்கு அடையாளமாக இருந்தாலும் எருதுகளை அன்போடு தழுவி அதன் உடம்பில் சிறு காயம் கூட ஏற்படா வண்ணம் நடைபெறுவதே இதன் சிறப்பு வெற்றி பெறும் ஆடவரை பெண்கள் விரும்பி   மனப்பர்