நலம் நல்கும் அம்மான் பச்சரிசி
தாவரவியல் பெயர்: Euphorbia hirta
குடும்பம்: Euphorbiaceae
இதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள்: பெடூலின், ஆல்ஃபா அமைரின்(Alpha-amyrin), கேம்பால்(camphol), குவர்சிடின்(Quercitin), யூபோர்பின்(Euphorbin)
நம்முடைய முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய மூலிகை செடிகளில் ஒன்று தான் அம்மான் பச்சரிசி. இவை பார்ப்பதற்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.
வேறு பெயர்கள்:
சித்திர வல்லாதி, சித்திர பாலாவி, சித்திர பாலாடை
பெயர் காரணம்:
தோற்றத்திலும் சுவையிலும் சிறு சிறு அரிசி குருணைகள் போல காணப்படுவதால்'பச்சரிசி'என்றும் தாய்ப்பால் சுரப்பு உணவு என்பதால்'அம்மான்'என்ற அடைமொழியும் சேர்த்து அம்மான் பச்சரிசி என்று பெயர் பெற்றது. இதன் இலைகள் கூர்மையாக இருக்கும் . இதன் மெல்லிய தண்டை உடைத்தால் பால் வடியும்.
மலச்சிக்கல் நீங்க:
அம்மான் பச்சரிசி இலைகளோடு, பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். அத்தோடு உடல் சூட்டையும் தணிக்கும்.
மரு:
மருவின் மீது அம்மான் பச்சரிசி பாலை தடவி வந்தால் மரு உதிரும்.
வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் நீங்க:
நெய்யில் அம்மான் பச்சரிசி இலைகளையும் பாசிப்பருப்பையும் போட்டு வதக்கி சாப்பிட வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் நீங்கும்.
ஆண் , பெண் பாலின பிரச்சனை:
பெண் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். கருவுறுதலை எளிதாக்கும். அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஐந்து நாட்கள் சாப்பிட வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்.
ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து பாலில் கலந்து இருபத்தி ஒரு நாட்கள் காலையில் குடித்து வர ஆண்மை பிரச்சனை சரியாகும்.
வீக்கம் மற்றும் கொப்புளங்கள்:
வீக்கம் மற்றும் கொப்புளங்கள் உள்ள இடத்தில் இதன் இலைகளை அரைத்து பற்றுப்போட குணமாகும்.
நகச்சுத்தி:
அம்மான் பச்சரிசி பாலை நகச்சுத்தி உள்ள இடத்தில் விட்டு வர நகச்சுத்தி குணமாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக