முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Amman Bacharisi : நலம் நல்கும் அம்மான் பச்சரிசி


நலம் நல்கும் அம்மான் பச்சரிசி

தாவரவியல் பெயர்:  Euphorbia hirta

குடும்பம்: Euphorbiaceae

    இதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள்: பெடூலின், ஆல்ஃபா அமைரின்(Alpha-amyrin), கேம்பால்(camphol), குவர்சிடின்(Quercitin), யூபோர்பின்(Euphorbin)

    நம்முடைய முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய மூலிகை செடிகளில் ஒன்று தான் அம்மான் பச்சரிசி. இவை பார்ப்பதற்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

 வேறு பெயர்கள்:

    சித்திர வல்லாதி, சித்திர பாலாவி, சித்திர பாலாடை

 பெயர் காரணம்:

    தோற்றத்திலும் சுவையிலும் சிறு சிறு அரிசி குருணைகள் போல காணப்படுவதால்'பச்சரிசி'என்றும் தாய்ப்பால் சுரப்பு உணவு என்பதால்'அம்மான்'என்ற அடைமொழியும் சேர்த்து அம்மான் பச்சரிசி என்று பெயர் பெற்றது. இதன் இலைகள் கூர்மையாக இருக்கும் . இதன் மெல்லிய தண்டை உடைத்தால் பால் வடியும்.

 மலச்சிக்கல் நீங்க:

    அம்மான் பச்சரிசி இலைகளோடு, பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். அத்தோடு உடல் சூட்டையும் தணிக்கும்.

 மரு:

    மருவின் மீது அம்மான் பச்சரிசி பாலை தடவி வந்தால் மரு உதிரும்.

 வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் நீங்க: 

     நெய்யில் அம்மான் பச்சரிசி இலைகளையும் பாசிப்பருப்பையும் போட்டு வதக்கி சாப்பிட வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் நீங்கும்.

ஆண் , பெண் பாலின பிரச்சனை:

   பெண் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். கருவுறுதலை எளிதாக்கும். அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஐந்து நாட்கள் சாப்பிட வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்.

    ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து பாலில் கலந்து இருபத்தி ஒரு நாட்கள் காலையில் குடித்து வர ஆண்மை பிரச்சனை சரியாகும்.

 வீக்கம் மற்றும் கொப்புளங்கள்:

    வீக்கம் மற்றும் கொப்புளங்கள் உள்ள இடத்தில் இதன் இலைகளை அரைத்து பற்றுப்போட குணமாகும்.

 நகச்சுத்தி:

    அம்மான் பச்சரிசி பாலை நகச்சுத்தி உள்ள இடத்தில் விட்டு வர நகச்சுத்தி குணமாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Manathakkali keerai : வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை

 Manathakkali keerai வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை      காலை உணவை தவிர்ப்பதாலும் , நேரம் கடந்து சாப்பிடுவதாலும், அதிக கார உணவுகளை உண்பதாலும் வயிற்றிலும், குடல் பகுதியிலும், வாயிலும் புண்கள் ஏற்படுகிறது.     Duodenal ulcer அதாவது முன்கடலில் ஏற்படும் புண் காரணமாக வெறும் வயிற்றில் எரிச்சல், அதிக பசி, சாப்பிட்டவுடன் வலி நின்று விடுதல், காரம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டவுடன் எரிச்சல் ஆகியவை முன் குடல் புண்ணின் முக்கிய அறிகுறிகள்.     Gastric ulcer அதாவது இரை பையில் புண் இருந்தால் பசி குறைவாக இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு வயிற்று வலி ஏற்படுதல் மற்றும் நெஞ்செரிச்சல் இதன் அறிகுறிகள் ஆகும்.     வயிற்றுப் புண்களை கட்டுப்படுத்த வல்லது மணத்தக்காளி. இதில் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. மேலும் புரோட்டின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன. எனவே மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள், இளம் பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற ஓர் உணவாக உள்ளது.     மலச்சிக்கலுக்கு சிறந்த மருத்துவ நிவாரணையா

mattu pongal : மாட்டுப் பொங்கல் :உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றி உணர்வோடு மதித்துப் போற்றிடும் திருநாள்

  மாட்டுப்பொங்கல் மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும். பெரும் பொங்கலுக்கு அடுத்த நாளன மாட்டுப்பொங்கல் உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றி உணர்வோடு மதித்துப் போற்றிடும் திருநாள் மாட்டுப் பொங்கல் பெரும் செல்வமாக கருதும் மாடுகளை உழவர்கள் குளிப்பாட்டி அழகுபடுத்தி, கழுத்தில் சலங்கை கட்டி, கொம்பில் வர்ணங்கள் பூசி, நெத்தியில் மஞ்சள் பூசி, குங்குமம் பொட்டு வைத்து பொங்கலிட்டு வணங்குவர்   மாட்டுப்பொங்கலை தொடர்ந்து எருது விடும் திருவிழா நடைபெறும் இவ்விழா மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, எருது கட்டு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது   தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் விழாவே மாட்டுப் பொங்கல் பண்டைய காலத்தில் ஏறு தழுவுதல் என பெயர் இவ்விளையாட்டு வீரத்திற்கு அடையாளமாக இருந்தாலும் எருதுகளை அன்போடு தழுவி அதன் உடம்பில் சிறு காயம் கூட ஏற்படா வண்ணம் நடைபெறுவதே இதன் சிறப்பு வெற்றி பெறும் ஆடவரை பெண்கள் விரும்பி   மனப்பர்