பொங்கல் பண்டிகை கொண்டாடும் முறை
உழவுத் தொழிலுக்கும், உழவர்களுக்கும், மரியாதை செலுத்தும் திருநாள் பொங்கல் திருநாள்.
தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் விளைந்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்த புது அரிசியில் பொங்கல் செய்யப்படும்
பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துவார்கள்
அதிகாலை எழுந்து மெழுகி, முற்றம் கோலம் இட்டு அதன் நடுவில்
பானை வைப்பர்.
புதிய பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும், புதிய கரும்பையும், காய் கறிகளையும் அன்று பயன்படுத்துவர்.
கோலமிட்ட
இடத்தில் தலைவாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத்
தொடங்குவர்.
மண்பானையில்அரிசி, பால், பச்சை பயிறு, வெல்லம், உலர் பழங்கள் போன்றவற்றை பொங்கலுக்கு பயன்படுத்துவர்.
முதற் பயனை கதிரவனுக்கு படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்து மகிழ்வார்.
பொங்கலோ பொங்கல்
என்று உரக்க கத்தி தங்கள் மகிழ்ச்சியை அருகில் உள்ள இல்லங்களுக்கும் ஓடிச்சென்று தங்கள்
அன்பை பரிமாறி கொள்வர்.
கருத்துகள்
கருத்துரையிடுக