முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

celebrating pongal festival in tamilnadu : பொங்கல் பண்டிகை

 பொங்கல் பண்டிகை கொண்டாடும் முறை 

       உழவுத் தொழிலுக்கும்,  உழவர்களுக்கும்,  மரியாதை செலுத்தும் திருநாள்  பொங்கல் திருநாள். 

தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.


நாட்டின் முதுகெலும்பான, உழவுத் தொழிலுக்கும்,  உதவிய சூரியனுக்கும், இயற்கைக்கும், நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபடப்படுகிறது.

 ஆடி மாதத்தில் விளைந்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்த     புது அரிசியில் பொங்கல் செய்யப்படும்

 பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துவார்கள்

அதிகாலை எழுந்து மெழுகி, முற்றம் கோலம் இட்டு அதன் நடுவில் 

பானை வைப்பர். 

புதிய பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும், புதிய கரும்பையும், காய் கறிகளையும் அன்று பயன்படுத்துவர்.

கோலமிட்ட இடத்தில் தலைவாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.

மண்பானையில்அரிசி, பால், பச்சை பயிறு, வெல்லம், உலர் பழங்கள் போன்றவற்றை பொங்கலுக்கு பயன்படுத்துவர்.

பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன் தலைவி மக்களுடன் கூடி நின்று பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று உரக்கக் கூறுவர்.

முதற் பயனை கதிரவனுக்கு படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்து மகிழ்வார்.

பொங்கலோ பொங்கல் என்று உரக்க கத்தி தங்கள் மகிழ்ச்சியை அருகில் உள்ள இல்லங்களுக்கும் ஓடிச்சென்று தங்கள் அன்பை பரிமாறி கொள்வர்.

பொங்கல் நான்கு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது 

போகிபொங்கல் 

தை பொங்கல் 

மாட்டுப் பொங்கல் மற்றும் 

காணும் பொங்கல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Manathakkali keerai : வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை

 Manathakkali keerai வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை      காலை உணவை தவிர்ப்பதாலும் , நேரம் கடந்து சாப்பிடுவதாலும், அதிக கார உணவுகளை உண்பதாலும் வயிற்றிலும், குடல் பகுதியிலும், வாயிலும் புண்கள் ஏற்படுகிறது.     Duodenal ulcer அதாவது முன்கடலில் ஏற்படும் புண் காரணமாக வெறும் வயிற்றில் எரிச்சல், அதிக பசி, சாப்பிட்டவுடன் வலி நின்று விடுதல், காரம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டவுடன் எரிச்சல் ஆகியவை முன் குடல் புண்ணின் முக்கிய அறிகுறிகள்.     Gastric ulcer அதாவது இரை பையில் புண் இருந்தால் பசி குறைவாக இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு வயிற்று வலி ஏற்படுதல் மற்றும் நெஞ்செரிச்சல் இதன் அறிகுறிகள் ஆகும்.     வயிற்றுப் புண்களை கட்டுப்படுத்த வல்லது மணத்தக்காளி. இதில் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. மேலும் புரோட்டின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன. எனவே மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள், இளம் பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற ஓர் உணவாக உள்ளது.     மலச்சிக்கலுக்கு சிறந்த மருத்துவ நிவாரணையா

Amman Bacharisi : நலம் நல்கும் அம்மான் பச்சரிசி

நலம் நல்கும் அம்மான் பச்சரிசி தாவரவியல் பெயர்:  Euphorbia hirta குடும்பம்: Euphorbiaceae     இதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள்: பெடூலின், ஆல்ஃபா அமைரின்(Alpha-amyrin), கேம்பால்(camphol), குவர்சிடின்(Quercitin), யூபோர்பின்(Euphorbin)     நம்முடைய முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய மூலிகை செடிகளில் ஒன்று தான் அம்மான் பச்சரிசி. இவை பார்ப்பதற்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.  வேறு பெயர்கள்:     சித்திர வல்லாதி, சித்திர பாலாவி, சித்திர பாலாடை  பெயர் காரணம்:     தோற்றத்திலும் சுவையிலும் சிறு சிறு அரிசி குருணைகள் போல காணப்படுவதால்'பச்சரிசி'என்றும் தாய்ப்பால் சுரப்பு உணவு என்பதால்'அம்மான்'என்ற அடைமொழியும் சேர்த்து அம்மான் பச்சரிசி என்று பெயர் பெற்றது. இதன் இலைகள் கூர்மையாக இருக்கும் . இதன் மெல்லிய தண்டை உடைத்தால் பால் வடியும்.  மலச்சிக்கல் நீங்க:     அம்மான் பச்சரிசி இலைகளோடு, பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். அத்தோடு உடல் சூட்டையும் தணிக்கும்.  மரு:     மருவின் மீது அம்மான் பச்சரிசி பாலை தடவி வந்தால் மரு உதிரும்.

mattu pongal : மாட்டுப் பொங்கல் :உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றி உணர்வோடு மதித்துப் போற்றிடும் திருநாள்

  மாட்டுப்பொங்கல் மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும். பெரும் பொங்கலுக்கு அடுத்த நாளன மாட்டுப்பொங்கல் உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றி உணர்வோடு மதித்துப் போற்றிடும் திருநாள் மாட்டுப் பொங்கல் பெரும் செல்வமாக கருதும் மாடுகளை உழவர்கள் குளிப்பாட்டி அழகுபடுத்தி, கழுத்தில் சலங்கை கட்டி, கொம்பில் வர்ணங்கள் பூசி, நெத்தியில் மஞ்சள் பூசி, குங்குமம் பொட்டு வைத்து பொங்கலிட்டு வணங்குவர்   மாட்டுப்பொங்கலை தொடர்ந்து எருது விடும் திருவிழா நடைபெறும் இவ்விழா மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, எருது கட்டு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது   தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் விழாவே மாட்டுப் பொங்கல் பண்டைய காலத்தில் ஏறு தழுவுதல் என பெயர் இவ்விளையாட்டு வீரத்திற்கு அடையாளமாக இருந்தாலும் எருதுகளை அன்போடு தழுவி அதன் உடம்பில் சிறு காயம் கூட ஏற்படா வண்ணம் நடைபெறுவதே இதன் சிறப்பு வெற்றி பெறும் ஆடவரை பெண்கள் விரும்பி   மனப்பர்