பொங்கல் திருநாள்
தமிழரின் கலாச்சாரத்தை உலகிற்கு உணர்த்தும் வாழ்வியலோடு கலந்த உன்னதமான பண்டிகை பொங்கல்
தமிழர்கள் எத்தனை வகையான விழாக்களை கொண்டாடினாலும் முதன்மையாக கொண்டாடப்படும் திருவிழா பொங்கல்
பொங்கல் திருநாள் அன்று பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது
நம் முன்னோர்களின் நம்பிக்கை
பொங்கல் என்ற சொல்லுக்கு மிகுதல்,சமைத்தல், செழித்தல் மற்றும் கொதித்தல் என்று பல பொருள் உண்டு
தை முதல் நாள் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது
பொங்கல் பண்டிகையானது தைப்பொங்கல், உழவர் திருநாள், தமிழர் திருநாள், அறுவடை திருநாள், என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது
தமிழரைப் போற்றும் நன்னாள் பொங்கல் திருநாள்
உழைக்கும் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், சூரியனுக்கும், கால்நடைகளுக்கும், தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நன்னாள் பொங்கல்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்
பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது
கருத்துகள்
கருத்துரையிடுக